கையை முறுக்கிக் கொண்டு பெரியாரும், அம்பேத்கரும் - சனாதனம் குறித்து பிரகாஷ் ராஜ் பரபர!

Prakash Raj
By Sumathi Sep 05, 2023 04:34 AM GMT
Report

சனாதனம் குறித்த பிரகாஷ் ராஜ் ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனாதனம் 

சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் சர்சையாக வெடித்துள்ளது.

கையை முறுக்கிக் கொண்டு பெரியாரும், அம்பேத்கரும் - சனாதனம் குறித்து பிரகாஷ் ராஜ் பரபர! | Prakash Raj Condemns Sanadhanam

தொடர்ந்து, அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் புகார்களை கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் சனாதனம் குறித்து பேசியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் கருத்து

இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இந்துக்கள் தனாதனியர்கள் அல்ல. ஆனால் தனாதனிகள் தேச விரோதிகள் எனக் குறிப்பிட்டுள்ளார். சனாதன தர்மத்தை விமர்சிக்க கம்யூனிஸ்ட்கள் பயன்படுத்தும் வார்த்தைத்தான் தனாதனி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்றொரு ட்வீட்டில், செங்கோல் நிறுவும் விழாவின் போது பல்வேறு ஆதினங்கள் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்ட புகைப்படத்தை குறிப்பிட்டு எதிர்காலத்தில் தனாதனி நாடாளுமன்றம் ஏற்படலாம். அன்பான குடிமக்களே இதை நீங்கள் ஏற்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.