பிரதமர் திட்டத்தில் இலவச வீடு; இந்த ஆவணங்கள் போதும் - முழு விவரம் இதோ..

Narendra Modi India
By Sumathi Jan 23, 2024 07:27 AM GMT
Report

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

 இலவச வீடு

பிரதமர் மோடி தலைமையிலான, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மத்திய அரசால் 2015ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் பயன்பெறலாம். இத்திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

pradhan-mantri-awas-yojana-scheme

பயனாளிகளின் பட்டியலை rhreporting.nic.in இணையதளத்தில் காணலாம். விண்ணப்பதாரர் வீடற்ற குடும்பமாக இருக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு அறைகள், கச்சா சுவர்கள், கச்சா கூரை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம்.

அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!

அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!

தகுதிகள் என்ன?

25 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவற்ற குடும்பம். 16 முதல் 59 வயது வரையிலான வயது வந்த ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பம். 16 முதல் 59 வயது வரை வயது வந்த உறுப்பினர்கள் இல்லாத குடும்பம். உடல் திறன் கொண்ட உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டவர்கள். நிலமற்ற குடும்பங்கள், சாதாரண வேலை மூலம் வருமானம் ஈட்டுதல்.

free-house

பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மற்றவர்கள், சிறுபான்மையினர். இந்தியாவில் வசிப்பவராக இருக்கவேண்டும். விண்ணப்பதாரருக்கு நிரந்தர வீடு இருக்கக்கூடாது. 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர் பெயர் ரேஷன் கார்டு அல்லது பிபிஎல் பட்டியலில் இருக்க வேண்டும். வாக்காளர் அட்டை கட்டாயம். மேலும் ஏதேனும் செல்லுபடியாகும் அடையாள அட்டை அவசியம். அனைத்து ஆவணங்களுடன் பொது சேவை மையத்திற்கு செல்லலாம். வீட்டு வசதித் திட்ட உதவியாளரிடம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.