பிரபல யூட்யூபர் தம்பதி.. தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி - என்ன காரணம்?

Youtube Tamil nadu Kerala Crime Death
By Swetha Oct 28, 2024 06:59 AM GMT
Report

பிரபலமான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூட்யூபர் தம்பதி.. 

கேரள - தமிழக எல்லையை ஒட்டியுள்ள பாறசாலை கிணற்றுமுக்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு சேது என்ற மகனும், ப்ரீது என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மகன் சேது கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வேலை செய்து வருகிறார்.

பிரபல யூட்யூபர் தம்பதி.. தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி - என்ன காரணம்? | Popular Youtuber Couple Commits Suicide And Died

இந்த நிலையில், தனியாக வசித்து வந்த செல்வராஜூம், பிரியாவும் யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் சமையல் வீடியோ, தங்களது வீட்டு நிகழ்ச்சிகள், டான்ஸ் ரீல்ஸ் ஆகியவற்றை வெளியிட்டு வந்தனர் இதில் அவர்கள் பிரபலமும் அடைந்தனர்.

சமீபத்தில் எர்ணாகுளத்தில் உள்ள மகன் சேது தன் தாய், தந்தையை தொடர்பு கொள்ள முயன்றபோது ஃபோனை எடுக்கவில்லை. அதனால் சேது தனது ஊருக்கே சென்று பார்த்தபோது செல்வராஜ் தூக்கில் தொங்கியும், பிரியா விஷம் குடித்தும் தற்கொலை செய்து வீட்டில் பிணமாக கிடந்துள்ளனர்.

ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை - அதிர்ச்சி பின்னணி!

ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை - அதிர்ச்சி பின்னணி!

என்ன காரணம்?

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை அறிந்து சம்பவ இடம் விரைந்த போலிஸார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரபல யூட்யூபர் தம்பதி.. தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி - என்ன காரணம்? | Popular Youtuber Couple Commits Suicide And Died

யூட்யூபில் போட்டு வந்த வீடியோவினால் கிடைத்த பிரபலத்தால் தொடர்ந்து செய்து வந்த தம்பதியர் கடன் வாங்கி அதை கட்டமுடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் யூட்யூபிலும் அவர்களது வீடியோக்களுக்கு வரவேற்பு குறைந்ததுடன்,

நெகட்டிவ் கமெண்டுகளும் அதிகமானதால் மனம் உடைந்த நிலையில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.