சிம்பு நடிச்சா பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மாட்டோம்...3 பிரபலங்கள் போட்ட கண்டீஷன்!
சிம்பு இந்த படத்தில் நடித்தால், நடிக்க மாட்டோம் என சில பிரபலங்கள் கூறியதாக கூறப்படுகிறது.
சிம்பு
நடிகர் சிம்பு குறித்து, ஆரம்ப காலத்தில் இருந்தே பல சர்ச்சைகள் எழுந்தது உண்டு. குறிப்பாக இவர் ஷூட்டிங்கிற்கு நேரத்திற்கு வர மாட்டார், டைம் கீப் அப் பண்ண மாட்டார் என பல புகார்கள் இருந்து வருகிறது.
ஆனால், மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு நடித்த 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்த போது, சிம்புவை மணிரத்னமே வந்து ஷூட்டிங்கிற்கு அழைத்து சென்றதாக கூறப்பட்டது.
மணிரத்தினம்
சிம்புவும் காலை 3 மணியாக இருந்தாலும் அடித்து பிடித்து கொண்டு, ஷூட்டிங் கிளம்பி சரியான நேரத்திற்கு சென்று விடுவாராம். மேலும் சிம்புவுக்கு மணிரத்தினம் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு.
சிம்பு 'செக்க சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து, மீண்டும் மணிரத்னத்தின் இயக்கத்தில் இணைந்து நடிக்க இருந்த மற்றொரு திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் கதையை சிம்புவிடம் கூறி மணிரத்தினம் சம்மதமும் வாங்கி வைத்திருந்தார்.
பொன்னியின் செல்வன்
அப்போதைக்கு இந்த படத்தில், நயந்தாரவும் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. சிம்பு நடித்தால் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிடுவேன் என கூறியுள்ளார்.
இவரை தொடர்ந்து, தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இரண்டு நடிகர்களும் வெளியேறிவிடுவேன் என கூறியுள்ளனர்.
இந்த தகவலை, மணிரத்னம் தயங்கியபடி சிம்புவிடம் கூற, நிலைமையை புரிந்து கொண்டு, தனக்காக யாரும் படத்தை விட்டு விலக வேண்டாம், நானே விலகி விடுகிறேன் என கூறி பெருந்தன்மையோடு விலகியுள்ளார் என கூறப்படுகிறது.