அதிரடியாக மாற்றப்பட்ட பாஜக மாநில தலைவர்..அறிவித்த தேசிய தலைமை
வரும் நாடாளுமன்றதேர்தலை முன்னிட்டு பாஜக மாநில தலைவரை மாற்றி அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
2024-ஆம் ஆண்டு தேர்தல் வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவிற்கு மிக முக்கியமானதாகும். 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் அக்கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.
காரணம் காங்கிரஸ் அமைத்து வரும் மெகா எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியே இதற்கு காரணமாகும். நாடெங்கிலும் பாஜகவிற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து கட்சிகள் பலவற்றை இணைத்து பெரிய கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கி வருகின்றது.
புதிய மாநில தலைவர்
இந்நிலையில், தான் தற்போது தமிழகத்தில் கூட்டணி பிரச்சனை அதிகரித்துள்ளது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படவேண்டும் என அதிமுக பாஜக தேசிய தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாக பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றது.
இச்சூழலில், அண்டைமாநிலமான புதுச்சேரியில் பாஜக மாநில தலைவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அம்மாநிலத்தின் புது பாஜக கட்சி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகலாந்து மற்றும் புதுச்சேரியில் மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.