மனிதாபமே இல்லையா..! இறந்தவரின் உடலை ஆற்றுக்குள் வீசிய காவலர்கள்..!

Viral Video Accident Bihar
By Karthick Oct 09, 2023 10:28 AM GMT
Report

விபத்தில் உயிர் இழந்தவரின் உடலை ஆற்றுக்குள் வீசிய காவலர்கள் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிர்ச்சி சம்பவம்

பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால் அவரை எதிரியாக எண்ணுபவர்கள் கூட சற்று மனமிளகி வந்து விடுவார்கள், ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பலரும் சற்று கொஞ்சம் கூட மனிதாபினம் இல்லாமல் நடந்து வருவது தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையே கொடுத்து வருகின்றது. 

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வெளியாகி பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது. பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் பகுலி தேசிய நெடுஞ்சாலையில், வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்திற்கு விரைந்த காவல் துறையை சேர்ந்தவர் அந்தச் சடலத்தை முறைப்படி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாமல், அருகில் இருந்த ஆற்றுக்குள் வீசியுள்ளார். அவ்வழியாக சென்றவர் இந்த வீடியோவை இணையத்தளத்தில் பதிவிட கடும் அதிர்வலைகளை இந்த சம்வவங்கள் ஏற்படுத்தி இருக்கின்றது.

v

இதனை தொடர்ந்து உயிர் இழந்தவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார், இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டு, சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர், கான்ஸ்டபிளை ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இஸ்ரேல்: இளம்பெண்ணை ஆடையின்றி பயங்கரவாதிகள் இழுத்துச்சென்ற கொடூரம் - கதறும் தாய்!

இஸ்ரேல்: இளம்பெண்ணை ஆடையின்றி பயங்கரவாதிகள் இழுத்துச்சென்ற கொடூரம் - கதறும் தாய்!

மேலும், சம்பவத்தின் போது பணியில் இருந்த இரண்டு ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரர்களின் ஒப்பந்தத்தையும் நிறுத்திவைத்துள்ளோம் என்று தெரிவித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.