தேனி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; எல்லாம் பொய் - காவல்துறை பரபரப்பு

Tamil Nadu Police Theni
By Karthikraja Sep 24, 2024 07:28 AM GMT
Report

தேனி கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரில் உண்மை இல்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.

தேனி பாலியல் வன்கொடுமை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் படித்து வரும் கல்லூரி மாணவி, அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு தப்பி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

dindugal railway station

இதனையடுத்து மாணவியை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல் துறையினர் சேர்த்துள்ளனர். 

நர்சிங் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்!

நர்சிங் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்!

பொய் புகார்

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் தேனி பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என காவல் துறையினர் உறுதிப்படுத்தினர். 

theni police station

இது தொடர்பாக மருத்துவமனையில் உள்ள மாணவியிடம் விசாரித்த போது, அந்த புகாரில் உண்மை இல்லை என்றும், மன அழுத்தத்தில் அந்த மாணவி புகார் அளித்துள்ளார் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.