காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மு.க.ஸ்டாலின்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.186.51 கோடி செலவில் 1,036 காவலர் குடியிருப்புகள் கட்டபட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, காவலர் குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார்.
காவலர் குடியிருப்புகள்
அதனையடுத்து, 'உங்கள் சொந்த இல்லம்' என்ற திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பீட்டில் 253 வீடுகளையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை, புதுப்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து குடியிருப்புகளை பார்வையிட்டு காவலர் குடும்பங்களுடன் கலந்துரையாடினார்.