தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது - டிஜிபி சைலேந்திர பாபு
Tamil Nadu Police
By Thahir
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018-ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டாலும், 12 மரணங்கள் மட்டும்தான் போலீசாரால் நிகழ்ந்துள்ளன.
2021 இல் நான்கு மரணங்கள், 2022-ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!