ஒரே ஒரு செல்ஃபி தான், பதவி காலி - காவல் அதிகாரிக்கே ஆப்பு வைத்த குடும்பம்!
காவல் அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினர் எடுத்த புகைப்படத்தால் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரி
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் ரமேஷ் சந்திர சகானி. இவரின் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
அந்த குழந்தைகள் வீட்டில் கட்டு காட்டாக பணத்தை பரப்பி வைத்து புகைப்படம் எடுத்து வைத்து விளையாடியுள்ளனர். இந்த புகைப்படம் எதிர்பாராதவிதமாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும், இது காவல்கண்காணிப்பாளர் சித்தார்த் சங்கர் மீனா வரை சென்றுள்ளது.
விசாரணை
இந்நிலையில், அந்த புகைப்படத்தில் மொத்தம் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் 27 உள்ளன. அதன்படி, பணத்தின் மதிப்பு ரூ.14 லட்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த பணம் லஞ்சமாக வாங்கப்பட்டது என்று புகார் எழுந்த நிலையில், விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையில், இந்த புகைப்படம் 2021 நவம்பரில் எடுக்கப்பட்டது எனவும், அதில் இருக்கும் பணம் குடும்ப சொத்து விற்றதில் கிடைத்த பணம் என ரமேஷ் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது அதன் பின்னரே உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளனர்.