போலீஸ் ஜோடியின் ப்ரீ வெட்டிங் ஃபோட்டோஹூட் - தாறுமாறாக வைரலாகும் வீடியோ!
காவல்துறையைச் சேர்ந்த இருவரின் ப்ரீ-வெட்டிங் ஷூட் வைரலாகி வருகிறது.
ப்ரீ-வெட்டிங் ஷூட்
திருமணம் என்றாலே, தற்போதெல்லாம் ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் போட்டோ மற்றும் வீடியோ ஷூட்கள் தான் நினைவுக்கு வரும்படி ட்ரெண்ட் செட் செய்துள்ளனர்.
அதன்படி, காவல்துறையைச் சேர்ந்த ராவுரி கிஷோரும், பாவனா என்ற ஜோடி ஐதராபாத்தில் நடத்திய ப்ரீ-வெட்டிங் ஷூட் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. 2 நிமிட வீடியோவில் ஒரு பாடல் காட்சி உள்ளது.
வைரல் வீடியோ
அதில், இரண்டு காவல்துறை அதிகாரிகளும் தங்கள் சீருடைகளை அணிந்துகொண்டு ஒரு திரைப்படக் காட்சியைப் போல காவல் நிலையத்திற்குள் நுழைவதைக் காணலாம். இதற்கடுத்து ஹைதராபாத்தில் சார்மினார் மற்றும் லாட் பஜார் உள்ளிட்ட அழகிய இடங்களில் இந்த தம்பதி பாடி நடனமாடுவதைப் போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
#Watch | Pre-wedding shoot of two #Hyderabad cops goes viral. pic.twitter.com/vDkudkYSGu
— Raviteja yadav (@CRavitejayadav) September 17, 2023
இந்த வீடியோவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தவாறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. காவல்துறையினர் தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு காவல்துறை சொத்துக்களை பயன்படுத்தக்கூடாது எனவும், சிலர் வித்தியாசமான படைப்பு எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாராட்டிகளை தெரிவித்துள்ள அம்மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சிவி.ஆனந்த் , இதில் என்ன தவறு இருக்கிறது? அதே நேரம் திருமணத்திற்காக இப்படி காவல் துறை வாகனங்களைக் கொண்டு ப்ரீ-வெட்டிங் ஷூட் நடத்துவது குறித்து தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி,
அவர்களிடம் உரிய அனுமதியை வாங்கி வீடியோ பதிவு செய்திருக்கலாம். இது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகி விடக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.