கவர்னரும், அண்ணாமலையும் மெண்டல் - சாடிய ஆர்.எஸ்.பாரதி மீது புகார்!
ஆளுநரையும், அண்ணாமலையையும் விமர்சித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி
திருநெல்வேலியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை அவதூறாக பேசியதாக பாஜக மண்டல தலைவர் கண்ணன் தலைமையிலான பாஜகவினர் போலீசில் புகாரளித்துள்ளனர்.
அதில், கவர்னர் ரவியும் அண்ணாமலையும் மென்டல். ஐபிஎஸ் படித்தவர்களில் பலர் இப்படி மென்டலாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரையும் சொல்லவில்லை.
அவதூறு
ஐபிஎஸ் வேலையை விட்டு விட்டு அரசியலுக்கு வருபவர்கள் மென்டலாக உள்ளார்கள். பாஜக தமிழகத்தில் இனி ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். ஒரு நாள் சிறையில் இருந்தால் அதன் பிறகு கட்சியே வேண்டாம் என்று அவர்கள் ஓடி விடுவார்கள் என கடுமையாக சாடினார்.
இதனால் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.