ஆயுத கிடங்கில் துப்பாக்கிகளை சூறையாடிய மர்ம கும்பல் - தொடரும் வன்முறை!

India Manipur
By Vinothini Aug 04, 2023 12:09 PM GMT
Report

தொடர்ந்து நடந்து வரும் வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கலவரம்

மணிப்பூரில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதற்காக சர்வதேச நாடுகளில் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையின் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் போலீஸ் ஆயுத கிடங்கை உடைத்து அதிலிருந்த நவீன துப்பாக்கிகளை வன்முறையாளர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police-armory-has-been-looted-in-manipur

மேலும், இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட FIR- ல்ன், "ஆகஸ்ட் 3ம் தேதி காலை 9.45 மணிக்கு சுமார் 45 இலகுரக வாகனங்களுடன் வந்த 500 பேர் கொண்ட வன்முறை கும்பல், ஆயுத கிடங்கில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு உள்ளே நுழைந்து ஆயுதங்களை கொள்ளையடித்துள்ளனர்".

மீட்கும் பணி

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் 327 ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர், 20 கண்ணீர் புகைகுண்டையும் பயன்படுத்தியுள்ளனர். இதில் ஒரு காவராலும் உயிரிழந்துள்ளார். மேலும், மே 3-ம் தேதி இதே போல அரசு ஆயுத கிடங்கிலிருந்து சுமார் 4,000 துப்பாக்கிகளும் லட்சக்கணக்கான தோட்டாக்களும், வெடிபொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

police-armory-has-been-looted-in-manipur

இதனை மீட்கும் பணி நடந்து வருகிறது, இதை தற்பொழுது வரை 1600 துப்பாக்கிகள் மணீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.