4 நாட்களில் 2 -வது முறை தமிழகம் வரும் பிரதமர்..? பயண நோக்கம் என்ன..?
நாளை நாட்டின் பிரதமர் மோடி, தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு வரவுள்ளார்.
அடுத்தடுத்த வருகை
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அடுத்தடுத்து தமிழக பயணத்தை மேற்கொண்டு வருகின்றார் பிரதமர் மோடி.
ஜனவரி திருச்சி, ராமேஸ்வரம், சென்னை கேலோ இந்திய விளையாட்டு என அடுத்தடுத்து வருகை தந்த அவர், கடந்த 28, 29 ஆகிய தினங்களிலும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் கால் பதிக்க பாஜக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாஜகவின் அடுத்த நகர்வாக நாளை மீண்டும் சென்னை வருகின்றார் பிரதமர் மோடி.
பயண நோக்கம்
மகாராஷ்டிராவில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் அவர்,அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கின்றார்.
அதனை தொடர்ந்து மாலையில் கல்பாக்கத்தில் இருந்து சென்னை வரும் பிரதமர் மோடி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், மாலை 6.20 மணியளவில் அங்கிருந்து தெலுங்கானா மாநிலம் செல்கிறார்.