கீழே கிடந்த தேசிய கொடி; பார்த்ததும் மோடி செய்த செயலை பாருங்க - வைரல் வீடியோ!
பிரதமர் மோடியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் நடப்பு உச்சிமாநாடு தென்னாப்பிரிக்காவால் நடத்தப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அதிபர் மாடமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அங்கு பேசிய அவர், இந்த ஐந்து நாடுகளின் சமூகங்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.
வைரல் வீடியோ
ஒருமித்த கருத்தை அடிப்படையாகக் கொண்ட குழுவின் விரிவாக்கத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும். சுமார் 20 ஆண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நீண்ட மற்றும் அற்புதமான பயணத்தில், நாம் எண்ணற்ற சாதனைகளைச் செய்துள்ளோம்.
VIDEO | During the group photo at BRICS Summit in Johannesburg, PM Modi noticed the Indian Tricolour on the ground, which was kept to denote standing position of leaders. PM Modi immediately picked the national flag and kept it with him. South African President Cyril Ramaphosa,… pic.twitter.com/9lDMUhD8hs
— Press Trust of India (@PTI_News) August 23, 2023
ஆப்பிரிக்க யூனியனை ஜி20-ல் நிரந்தர உறுப்பினராக்கும் இந்தியாவின் முன்மொழிவுக்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஆதரவு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, மேடையில் தலைவர்கள் நிற்கும் நிலையை குறிக்க தரையில் தேசிய கொடிகள் வைக்கப்பட்டிருந்தன.
தரையில் மூவர்ண கொடியை கண்ட பிரதமர் மோடி குனிந்து அதனை எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.