105 வயதில் மத்திய அரசு விருது - கோவை பாப்பம்மாள் மறைவுக்கு.. பிரதமர் செய்த செயல்!

Narendra Modi India
By Vidhya Senthil Sep 28, 2024 05:37 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

உடல்நலக்குறைவால் காலமான பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி பாப்பம்மாளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

 பத்மஸ்ரீ விருது

கோவையை சேர்ந்த பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள் 108 வயது மூதாட்டி கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வந்தார்.

kovai

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த இவர் ஆற்றி வந்த சேவைகளை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு மூதாட்டி பாப்பம்மாளுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதினை வழங்கி கௌரவப்படுத்தியது.

விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி? இஸ்ரோ சேர்மன் வெளியிட்ட முக்கிய அப்டேட்

விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி? இஸ்ரோ சேர்மன் வெளியிட்ட முக்கிய அப்டேட்

அதுமட்டுமில்லாது கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக சார்பில் ‘பெரியார் விருது’ மூதாட்டி பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

 பிரதமர் மோடி 

இந்த நிலையில் வயது முப்பு காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுப் படுத்த படுக்கையானார்.அவரை குடும்பத்தினர் கவனித்து வந்த நிலையில் நேற்று (செப்.27) இரவு உயிரிழந்தார். இந்த நிலையில் மூதாட்டி பாப்பம்மாளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாப்பம்மாள் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன்.

இயற்கை வேளாண் துறையில் அவர் முத்திரை பதித்தார். அவருடைய அன்பும், எளிமையும் மக்களை ஈர்த்தது.அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.