முதல் முறை கிரீஸூக்கு பயணம்; பிரதமர் மோடிக்கு உயரிய விருது - பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
பிரதமர் மோடிக்கு கிரிஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தற்போது கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். 40 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில், நாட்டின் உயரிய விருதான The Grand Cross of the Order of Honour என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை 140 கோடி இந்திய மக்கள் சார்பாக பெற்றுக்கொள்கிறேன்,
கிரிஸ் விருது
விருது வழங்கியதற்கு நன்றி என்று மோடி தெரிவித்துள்ளார். பொதுவாக இந்த விருது என்பது கிரீஸ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் தலைவர்களுக்கு வழங்கப்படும். இதுதொடர்பாக கிரீஸ் நாட்டின் தரப்பில், பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் துணிச்சலாக சீர்த்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தியா மீது கிரீஸ் மக்கள் நல்ல மரியாதையை வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.