பாரத்-இந்தியா சர்ச்சை; இதெல்லாம் முடிஞ்சா பெயர் மாற்றம்? அமைச்சர்களுக்கு மோடி சூசகம்!

Narendra Modi India
By Sumathi Sep 09, 2023 03:49 AM GMT
Report

பாரத் – இந்தியா அரசியல் சர்ச்சையில் இருந்து விலகியிருக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி 

ஜி20 உச்சி மாநாடு அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று இருப்பதற்கு பதிலாக ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாரத்-இந்தியா சர்ச்சை; இதெல்லாம் முடிஞ்சா பெயர் மாற்றம்? அமைச்சர்களுக்கு மோடி சூசகம்! | Pm Modi Advise Ministers About India Bharath Issue

அதனைத் தொடர்ந்து, வரும் 18-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.

அறிவுரை

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் ஜி20 மநாடு மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், பாரத் – இந்தியா சர்ச்சையில் இருந்து விலகியிருக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஐ.நா. பொதுச்செயலரின் உலகளவிய செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், "இந்தியா பெயரை மாற்றுவதற்கான அனைத்து சம்பிரதாயங்கள் முடித்ததும், எங்களுக்கு தெரிவித்தால், ஐ.நா. அலுவலக பதிவேடுகள் மற்றும் ஆவணங்களில் ''பாரத்'' என மாற்ற நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.