கவுரவத்தை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி; நான் சொன்னது சரிதான் - பிரதமர் மோடி தாக்கு!

BJP Narendra Modi Uttar Pradesh India Lok Sabha Election 2024
By Jiyath May 17, 2024 04:30 PM GMT
Report

கவுரவத்தை காப்பாற்ற 50 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.

கவுரவத்தை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி; நான் சொன்னது சரிதான் - பிரதமர் மோடி தாக்கு! | Pm Modi About Congress And Rahul Gandhi

இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் பதேபூரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தை போதைப்பொருட்களின் வணிக மையமாக மாற்றிய திமுக அரசு - டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழகத்தை போதைப்பொருட்களின் வணிக மையமாக மாற்றிய திமுக அரசு - டிடிவி தினகரன் கண்டனம்!

நிரூபிக்கப்பட்டுள்ளது

அப்போது பேசிய அவர் "கவுரவத்தை காப்பாற்ற 50 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. கடந்த தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி மத்திய மந்திரி ஸ்மிருதி இராணியிடம் தோற்றார்.

கவுரவத்தை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி; நான் சொன்னது சரிதான் - பிரதமர் மோடி தாக்கு! | Pm Modi About Congress And Rahul Gandhi

இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதியில் மீண்டும் போட்டியிட மாட்டார் என்று நான் சொன்னேன். நான் சொன்னது சரிதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் (மக்கள்) அதிக எண்ணிக்கையில் பாஜகவுக்கு வாக்களித்து உங்கள் பகுதியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.