அதிமுக தொண்டர்கள் அனைவரும் தயவு செய்து அமைதி காக்கவும் - ஓ.பன்னீர்செல்வம்..!
அதிமுக தொண்டர்கள் அனைவரும் தயவு செய்து அமைதி காக்கவும் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
வருகிற ஜுன் 23-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து நேற்று அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஓ.பி.எஸ் வேண்டுகோள்
இந்த நிலையில், அதிமுகவில் ஒற்றைத்தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
இத்தகைய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இவ்வாறாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது டுவிட்டரில், அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேஎண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 15, 2022
என்னோட ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குதான் : திண்டுக்கல் சீனிவாசன்