மைசூரு அரண்மனைக்கு புறாக்களால் வந்த ஆபத்து - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட கமிஷனர்!!

Karnataka India
By Karthick Jun 28, 2024 07:32 AM GMT
Report

உலக புகழ் பெற்ற மைசூர் அரண்மனையின் வடக்கு வாசல் அருகே உள்ள புறாக்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் தானியங்களை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். பொதுமக்களால் வீசப்படும் தானியங்களுடன், ஒரு ஜெயின் அமைப்பின் சார்பில் தினமும் இரண்டு மூட்டை கோதுமை, சோளம் மற்றும் அரிசி ஆகியவை புறாக்களுக்கு வழங்கப்படுகிறது.

Mysore palace

அதிகப்படியான உணவு மைசூர் அரண்மனையின் சுற்றுப்புறத்தின் தூய்மையை பாதித்தது மட்டுமல்லாமல், புறாக்களின் எச்சம் படிவதற்கும் வழிவகுத்தது. பாரம்பரிய நிபுணர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூட புறாக்களுக்கு உணவளிக்கும் இத்தகைய நடைமுறைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர், என்றார்.

அதிரடி உத்தரவு 

இது தொடர்பாக தான் மாவட்டத்தின் துணை ஆணையர் கே.வி. ராஜேந்திரன் மைசூரு அரண்மனை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்னமான கட்டிடத்தின் அருகே புறாக்களுக்கு அதிகப்படியான உணவளிப்பதால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இனி.. ரயில் பெர்த்தில் பயணிகள் இவ்வளவு நேரம் தான் தூங்கலாம் - ரயில்வே நடவடிக்கை!

இனி.. ரயில் பெர்த்தில் பயணிகள் இவ்வளவு நேரம் தான் தூங்கலாம் - ரயில்வே நடவடிக்கை!

மைசூரு அரண்மனையின் வடக்கு வாசலில் அதிக அளவில் தானியங்களை கொட்டிவது கட்டிடத்தின் தூய்மையையும் அழகையும் கெடுக்கும் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, திரு.ராஜேந்திரன் மைசூரு அரண்மனை வாரியம் மற்றும் மைசூரு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Mysore palace pigeons trouble

புறாக்களுக்கு உணவளிக்கும் இடத்தை பாரம்பரிய கட்டிடங்களில் இருந்து படிப்படியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிட்டி கார்ப்பரேஷன் (MCC) மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் உள்ளது. உணவளிக்கும் இடத்தில் புறாக் கூட்டங்கள் வந்து செல்வது செல்ஃபி பாயிண்ட் மட்டுமின்றி, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோகிராபர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.