இனி ஏடிஎம் மையத்தில் பி.எப். பணம் எடுக்கலாம் - எப்போது இருந்து தெரியுமா?

India Money EPFO
By Sumathi Dec 14, 2024 11:30 AM GMT
Report

ஏடிஎம் மையத்தில் பி.எப். பணம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைப்பு நிதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்​பில் (இபிஎப்ஓ) குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் 7.37 கோடிக்​கும் மேற்​பட்ட உறுப்​பினர்கள் உள்ளனர்.

epfo

இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், பிஎப் பணத்தை எடுக்​கும் நடைமுறை மிகவும் கடினமாக இருப்​பதாக பலரும் புகார் தெரி​வித்து வருகின்​றனர்.

இனி பி.எஃப் முன்பணம் எடுக்க முடியாது - அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இனி பி.எஃப் முன்பணம் எடுக்க முடியாது - அதிர்ச்சியில் ஊழியர்கள்!

முக்கிய அப்டேட்

இதை எளிமைப்​படுத்த வங்கிகளை போன்று ஏடிஎம் மையங்​களில் பிஎப் பணத்தை எடுக்​கும் வசதியை அறிமுகப்​படுத்த திட்​ட​மிடப்​பட்டு உள்ளது. இதற்காக இபிஎப்ஓ உறுப்​பினர்​களுக்கு ஏடிஎம் அட்டை வழங்​கப்​படும். சந்தா​தா​ரர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்​பிக்க வேண்​டும்.

இனி ஏடிஎம் மையத்தில் பி.எப். பணம் எடுக்கலாம் - எப்போது இருந்து தெரியுமா? | Pf Withdrawal In Atm Update Details

அவர்​களின் விண்​ணப்​பங்கள் ஏற்கப்​பட்ட பிறகு ஏடிஎம் மையங்​களில் பணம் எடுத்து கொள்ளலாம். எவ்வளவு எடுக்​கலாம் என்ப​தற்கு வரம்பு நிர்​ண​யிக்​கப்​படும். தற்போது தொழிலாளர் பங்களிப்பு 12% ஆக உள்ளது. இந்த வரம்பு நீக்​கப்பட உள்ளது. சிலர் 10% தொகையை செலுத்த விரும்​பலாம்.

வேறு சிலர் 15% தொகையை செலுத்த விரும்​பலாம். புதிய கொள்​கை​யின்படி தொழிலா​ளர்​களின் விருப்​பத்​துக்கு ஏற்ப சதவீதத்தை நிர்​ண​யித்து கொள்​ளலாம். எனினும் நிறு​வனங்​களின் பங்களிப்பு தொகை​யில் மாற்​றம் செய்​யப்​படாது எனத் தெரிவித்துள்ளனர்.