’பெட்ரோல், டீசல் சிறப்பான பார்ட்னர்ஷிப்’ விலை உயர்வை கலாய்த்த இந்திய கிரிக்கெட் வீரர்

people tiwary century
By Jon Feb 19, 2021 01:26 AM GMT
Report

இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட சில இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்துள்ளது. பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு அதிகரித்ததே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை.

தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால் பெட்ரோலின் விலையும் அதிகரித்து வருகிறது. எனவே மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்து பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. மாறாக பெட்ரோல் மீதான வரி தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்த பிரபலங்கள் தற்போது அமைதியாக உள்ளார்கள் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி பெட்ரோல் விலை உயர்வை சாடி ட்வீட் செய்துள்ளார்.

அதில், “பெட்ரோல் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளது. ஆரம்பம் முதலே பெட்ரோல் சதம் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. டீசல் துணையுடன் இருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

சாமானிய மக்களுக்காக விளையாடுவது எளிதல்ல. ஆனாலும் நீங்கள் சிறப்பாக விளையாடியுள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.