25 வருடங்கள்..மூன்று வேளை..வெறும் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் வினோத நபர்!

Karnataka India
By Swetha Sep 30, 2024 03:30 PM GMT
Report

நபர் ஒருவர் என்ஜின் ஆயிலை மட்டும் குடித்து வாழ்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 என்ஜின் ஆயில்

கர்நாடக, சிவமொக்கா பகுதி பானுவார நகரைச் சேர்ந்தவர் குமார் (45). இவருக்கு பெற்றோர், உறவினர்கள் யாரும் இல்லை. சிறு வயது முதல் வயிற்று பசிக்காக, கிடைத்த வேலையை செய்து வந்தார்.

25 வருடங்கள்..மூன்று வேளை..வெறும் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் வினோத நபர்! | Person Lives Only By Drinking Engine Oil For 25Yrs

பின்னர் மெக்கானிக் வேலை கற்றுக் கொண்டு, கடைகளில் பணியாற்றி தன்னுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் தனது சிறு வயதில் பசித்த போது, சாப்பிட காசு இல்லாததால் வாகனங்களுக்கு பயன்படுத்திய பழைய ஆயிலை மூன்று வேளையும் குடித்து வாழ்ந்து வந்துள்ளார்.

நாளடைவில் அதுவே அவருக்கு பழக்கமாக மாறி விட்டது. இதுகுறித்து குமார் கூறுகையில், ‘நான் ஆயிலை குடித்து வருவது சிலருக்கு அதிசயமாக உள்ளது. இதற்காக நான் பல முறை அவர்களிடம் நேரடியாக ஆயிலை குடித்துக் காண்பித்துள்ளேன்.

மனித ரத்தத்தை குடிக்கும் வினோத பெண்; தினமும் 1 லிட்டர் அருந்தும் பழக்கம்! காரணம்?

மனித ரத்தத்தை குடிக்கும் வினோத பெண்; தினமும் 1 லிட்டர் அருந்தும் பழக்கம்! காரணம்?


வினோத நபர்

இதைக்கண்ட சிலர் என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு, பணமும் கொடுத்து உதவியுள்ளனர். இருசக்கர வாகனத்தின் ஆயிலை, கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து மூன்று வேளையும் குடித்து வருகிறேன். இதை தவிர உணவோ, குடிநீரோ நான் எடுத்துக் கொள்வதில்லை.

25 வருடங்கள்..மூன்று வேளை..வெறும் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் வினோத நபர்! | Person Lives Only By Drinking Engine Oil For 25Yrs

கடந்த 13 வருடங்களாக சபரிமலைக்கு நான் நடந்து சென்று வருகிறேன்’ என்றார். இதனை அறிந்த பொதுமக்கள் அவரை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த 25 வருடங்களாக இந்த நபர் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.