தமிழ்வழி பள்ளிகள் மூடல்.. தவிக்கும் 8 லட்சம் தமிழர் குழந்தைகள் - என்ன நிகழ்ந்தது?

Telangana
By Vinothini Nov 27, 2023 05:09 AM GMT
Report

தெலுங்கானாவில் தமிழ்வழி பள்ளிகள் மூடப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் பள்ளிகள்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். தெலங்கானாவில் தெலுங்கு மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டது. இந்த சட்டத்தால் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் எழுதவும் படிக்கவும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

people-worried-tamil-schools-closed-in-telangana

இதனால் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் இருந்த 20க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதுடன், தமிழர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும், தமிழ் பாடம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விடாத ரீல்ஸ் மோகம்.. கண்டித்தும் கேட்காத மனைவி, இறுதியில் கணவன் செய்த செயல் - அதிர்ச்சி!

விடாத ரீல்ஸ் மோகம்.. கண்டித்தும் கேட்காத மனைவி, இறுதியில் கணவன் செய்த செயல் - அதிர்ச்சி!

சிரமத்தில் தமிழர்கள்

இந்நிலையில், இது குறித்து தமிழர்கள் கூறுகையில், தமிழ் ஆசிரியர்களை நியமித்து விட்டு, பாடநூல்களை வழங்காமலும், போதிய ஒத்துழைப்பு அளிக்காமலும் பள்ளிகள் மூடப்பட்டதாக தெரிவித்தனர். வேறு வழியின்றி இந்தி அல்லது சமஸ்கிருதம் எடுத்து படிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது என்றும் ஊருக்கு செல்லும் போது தங்கள் பிள்ளைகள் தமிழில் பேச முடியாமலும் எழுத முடியாமலும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

people-worried-tamil-schools-closed-in-telangana

இதுபோல, குஜராத்தில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்ட போதே, தமிழர்கள் அதற்கு எதிராக குரலெழுப்பினர். அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு கடிதம் எழுதினார்.

தெலங்கானாவில் தமிழ் வகுப்புகளை மீண்டும் கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.