24-இல் தடைகளை உடைத்து ...பாஜகவிற்கு ஆதரவு!! நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி !!
வரும் 2024-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு ஆதரவு தரவேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி உரை
மத்திய பிரதேச மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் ஊடக மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா அனைத்து தடைகளையும் உடைத்துவிட்டது என்று பெருமிதம் தெரிவித்து உண்மையிலேயே இருந்த தடைகளும், ஊதிப் பெரிதுபடுத்தப்பட்ட தடைகளும் கடந்த 10 ஆண்டுகளில் தகர்க்கப்பட்டுவிட்டன எனக் கூறினார்.
இப்போது தேசம் 2047-ல் வளர்ந்த நாடாக உருவாகும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என நம்பிக்கை தெரிவித்து, வாரிசு அரசியலும் குடும்ப அரசியலும் தான் நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையான தடைகளாக இருந்தன என்று சுட்டிக்காட்டி ஆனால் பாஜக அரசு அதனை முடிவுக்குக் கொண்டுவந்தது என கூறினார்.

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் தமிழகம் - கேரளா அரசுகள்..!! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு !!
இப்போது சாமானியர்கள் தங்களிடம் கூடுதல் அதிகாரம் இருப்பதாக உணர்கிறார்கள் என்று தெரிவித்த பிரதமர் மோடி, வறுமை ஒழிப்பில் பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என தெரிவித்தார். அரசின் கொள்கைகளால் நடுத்தர வர்க்கம் அதிகரித்துள்ளது என்ற அவர், மாத வருமானம் பெறுவோரின் வருவாய் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
மக்கள் ஆதரிப்பார்கள்
தொடர்ந்து பேசிய அவர் இந்தியா நிலவில் வரலாற்று சிறப்புமிக்கு தடத்தைப் பதித்துள்ளது என்பதை தெரிவித்து ஜி20 உச்சி மாநாட்டை நடத்தியுள்ளது என்றும் செல்போன் ஏற்றுமதியிலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையிலும் இந்தியா மிளிர்கிறது என்றார்.
மேலும், நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இருமடங்காக அதிகரித்துள்ளது என்று கூறி, அன்றாடம் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை தூரத்தின் அளவு 12 கிலோ மீட்டரில் இருந்து 30 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என கூறினார். செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 70ல் இருந்து 150 ஆக அதிகரித்துள்ளது. ரயில் இருப்புப் பாதையின் தூரம் வெறும் 20 ஆயிரம் கிலோ மீட்டர்.
இப்போது அது 40 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.போன்றவற்றை பட்டியலிட்ட பிரதமர் மோடி. 2024 தேர்தலில் எல்லா தடைகளையும் உடைத்து மக்கள் பாஜகவை ஆதரிப்பர் என நம்பிக்கை தெரிவித்தார்.