இரவில் திடீரென மாஸ் கில்லிங் என்று வந்த போன் கால்.. பதறியடித்து சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
காவல் துறைக்கு திடீரென மாஸ் கில்லிங் நடந்துள்ளது என்ற போன் காலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போன் கால்
பிரிட்டனில் இரவு நேரத்தில் ஒருவர் தனது துணையுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த ஒரு கம்யூனிட்டி ஸ்பேஸில் சிலர் தரையில் படுத்துக்கிடந்தனர். அதனை பார்த்த வாக்கிங் வந்த மக்களில் சிலர் ஒருவேளை தீவிரவாதிகள் அல்லது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி ஒரே நேரத்தில் பலரை கொன்று விட்டதாக நினைத்தனர்.
அப்பொழுது வாக்கிங் வந்த நபர் ஒருவர் சிலர் தரையில் சுருண்டு விழுந்து கிடப்பதாகவும் இதனை பார்த்தால் "மாஸ் கில்லிங்" நடந்திருப்பதை போல தோன்றுவதாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக சைரன் போட்டுகொண்டு வேகமாக வந்தனர்.
அதிர்ச்சி
இந்நிலையில், அங்கு வந்த போலீசார் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக சொன்ன இடத்திற்கு போலீசார் சென்று பார்த்த போது பலர் ஒன்றாக கூடி யோகா செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு தரையில் படுத்து கண்களை மூடிகொண்டிருந்தனர், அப்பொழுது அந்த பக்கம் வந்த மக்கள் இருட்டில் இவர்களை பார்த்து இறந்துகிடப்பதாக நினைத்துக்கொண்டனர்.
பின்னர், அங்கு சென்ற போலீசார் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த்துவிட்டு அங்கிருந்து சென்றனர். மேலும், போலீசார் "கால் செய்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம், ஏனென்றால் அவர் அசம்பாவிதம் ஏதோ நடந்து விட்டது என்று நினைத்து தான் எங்களுக்கு தகவலை சொல்லி உள்ளார்" என்றனர்.

viral video: கோபத்துடன் படமெடுத்து நின்ற நாகம்... அசால்ட்டாக கையில் தூக்கிய நபருக்கு என்ன நடந்தது? Manithan
