இப்போ இதுதான் பிரச்சினையா..எல்லாம் உயிருடன் தானே இருக்கிறார்கள் - சீமான் ஆவேசம்!

Tamil nadu Seeman Andhra Pradesh Tirumala
By Swetha Sep 21, 2024 03:04 AM GMT
Report

லட்டு சாப்பிட்ட அனைவரும் உயிருடன் தானே இருக்கிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் ஆவேசம்

ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு பெரிய மவுஸ் உண்டு.

இப்போ இதுதான் பிரச்சினையா..எல்லாம் உயிருடன் தானே இருக்கிறார்கள் - சீமான் ஆவேசம்! | People Ate Laddu Are Still Alive Only Says Seeman

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில், திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் கலப்படம் இருப்பதாகவும், குறிப்பாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது” பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் பற்றிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர். "லட்டு தயாரித்த நிறுவனத்தை தான் கேட்க வேண்டும்.

லட்டில் மாட்டுக் கொழுப்பு; இனி திருப்பதிக்கு என்னாகும்? பின்னணி!

லட்டில் மாட்டுக் கொழுப்பு; இனி திருப்பதிக்கு என்னாகும்? பின்னணி!

பிரச்சினையா..

நாட்டில் இதுதான் பிரச்சினையா, சாப்பிட்ட அனைவரும் உயிருடன் தானே இருக்கிறார்கள். அதில் எதுவும் பிரச்சினை இல்லை தானே. இனிமேல் அப்படி தயாரிக்க வேண்டாம் என்று கூறலாம்.

இப்போ இதுதான் பிரச்சினையா..எல்லாம் உயிருடன் தானே இருக்கிறார்கள் - சீமான் ஆவேசம்! | People Ate Laddu Are Still Alive Only Says Seeman

முன்பு ஒப்பந்தம் கொடுத்தவருக்கு அதனை நீக்கிவிட்டு வேறு வேளையை பார்க்கலாம். இதை ஒரு நாட்டின் பிரச்சினையாக கொண்டு போக வேண்டாம்." "ஆட்சியில் இருப்பவர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினையே இங்கு ஏராளமாக உள்ளது.

அதை பற்றி ஏன் பேச மறுக்கின்றீர்கள். லட்டு அப்படி தயாரிக்க கூடாது எனில், அதை தயாரித்தவர்களிடம் தான் விசாரிக்க வேண்டும். ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட நிறுவனத்திடம் தான் இதுபற்றி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.