புற்றுநோயோடு ஜாம்பவான் பீலே - மருத்துவமனையில் குவிந்த குடும்பத்தினரால் பரபரப்பு!
கால்பந்து ஜாம்பவானான பீலே, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீலே
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே(82). சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்த ஹீரோவாக வலம் வந்தவர். அந்த தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து அக்கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது மூச்சு திணறலால் அவதிப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், வரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்து மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
உடல்நிலை மோசம்
ஆனால் மருத்துவமனை சார்பில் உடல்நிலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவருடன் நேரம் செலவிட குடும்பத்தினர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் தனது தந்தையை மார்போடு அணைத்தபடி அவரது மகள் கெலி நசிமென்டோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுபூர்வமான புகைப்படம் என்றை வெளியிட்டுள்ளார்.