‘நிறைய நம்பிக்கையுடன் இருக்கிறேன்..’ - ரசிகர்களுக்கு கால்பந்து ஜாம்பவான் பீலே உருக்கமான பதிவு..!
‘நிறைய நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்று கால்பந்து ஜாம்பவான் பீலே ரசிகர்களுக்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கால்பாந்து ஜாம்பவான் பிலே
சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் கால்பாந்து போட்டிகளில் ஹீரோவாக வலம் வந்தவர் பிலே. இவரின் முழு பெயர் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ. இவர் சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்து மகுடம் சூடியவர். அதிக கோல்கள் அடித்த தரவரிசையில் இவர் 10-வது இடத்தில் உள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
சமீபத்தில், பீலே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பிலேவிற்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அக்கட்டி அகற்றப்பட்டது. இதனையடுத்து, பலவீனமான உடல்நலத்தால் பாதிக்கப்பட்டு வந்த பிலே, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவரது மகள் கெல்லி நஸிமென்டோ இன்ஸ்டாவில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், என் தந்தைக்கு பெருங்குடல் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் குணமடைவார் என்று பதிவிட்டுள்ளார்.
பீலேவின் உருக்கமான பதிவு
கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சைக்கு பீலேவின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என பிரேசில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன. இச்செய்தி உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், பீலே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "நான் தைரியமாக இருக்கிறேன், நிறைய நம்பிக்கையுடன் இருக்கிறேன். வழக்கம் போல் எனது சிகிச்சையைப் பின்பற்றுகிறேன். நான் பெற்ற அனைத்து கவனிப்புக்கு மருத்துவ மற்றும் நர்சிங் குழுவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், உலகம் முழுவதும் உங்களிடமிருந்து நான் பெறும் ஒவ்வொரு அன்பின் செய்தியும் என்னை முழு ஆற்றலுடன் வைத்திருக்கிறது. மேலும் உலகக் கோப்பையில் பிரேசிலையும் பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
பீலே உடல் நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.