இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியாவது ஏற்பாடு பண்ணுங்கப்பா - மன்றாடும் பாகிஸ்தான்!
இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டியாவது ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும் என ரமீஷ் ராஜா வலியுறுத்தியுள்ளார்.
IND vs PAK
பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிப்பதாக பதிலடியாக பல்வேறு வகைகளில் பாகிஸ்தானுடனான தொடர்புகளை இந்தியா துண்டித்துள்ளது. அதன் படி, கிரிக்கெட் போட்டிகளிலும் அந்நாட்டு அணியுடன் பங்கேற்பதை நிறுத்திக் கொண்டது.
ஐசிசி தொடர்களை கடந்து மற்ற போட்டிகளில் நீண்ட வருடங்களாக இரு அணிகளும் விளையாடவில்லை. அதனைத் தொடர்ந்து, அரசியலை விளையாட்டில் புகுத்த வேண்டாம், பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடர்களை நடத்த இந்தியா முன்வர வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வந்தது.
பாகிஸ்தான் விருப்பம்
ஆனால் தொடர்ச்சியாக இந்தியா அதனை நிராகரித்து வந்தது. இந்நிலையில், இப்போது மீண்டும் இருநாட்டு தொடர்களை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா பேசும்போது,
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அவசியம் என தெரிவித்துள்ளார். இரு அணிகளும் டெஸ்ட் விளையாடினால், அது கிரிகெட்டுக்கும் நல்லது என தெரிவித்துள்ளார்.