ஏலத்தில் PBKS தவறுதலாக வாங்கிய வீரர்...இன்னைக்கு match வின்னர் - கவனம் பெற்ற வீரர் பின்னணி
நேற்று குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் த்ரில் வெற்றியை பஞ்சாப் அணி பெற்றுள்ளது.
குஜராத் - பஞ்சாப்
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி , 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 199 ரன்களை குவித்தது.
அணியில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 89(48) எடுக்க, சாய் சுதர்ஷன் அதிரடியாக 19 பந்துகளில் 31 ரன்னும், ராகுல் தேவட்டியா வெறும் 8 பந்துகளில் 23 ரன்களை விளாசினர்.
200 ரன்களை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். கேப்டன் தவான் 1 ரன்னிலும், பைர்ஸ்டோ 22 ரன்னிலும்,சாம் கரண் 5 ரன்னிலும், ராசா 5 ரன்னிலும் அவுட்டாக பஞ்சாப் அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
தவறுதலாக....
சற்று தாக்கு பிடித்து ஆடிய பிராப்சிம்ரன் 35 ரன்களில் வெளியேற பஞ்சாப் ரசிகர்களே துவண்டு போயினார். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்களை குவித்தார்.
6 விக்கெட்டிற்கு களமிறங்கிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 6 ஃபோர், 4 சிக்ஸர்களை விளாசி சஷாங்க் சிங் புதிய ஐபிஎல் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். ஆனால், அவரை அணியில் வாங்கியதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதாவது ஏலத்தில் இரண்டு சஷாங்க் சிங் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப் அணி வாங்க நினைத்தது 19 வயதான சஷாங்க் சிங்கை. ஆனால் மாறுதலாக 32 வயதான சஷாங்க் சிங்'கை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. தவறுதலாக வாங்கப்பட்ட ஷஷசாங் சிங்கை திருப்பி கொடுக்க பஞ்சாப் அணி முடிவெடுத்த நிலையிலும், இறுதியில் அவரை தக்கவைத்து கொண்டது. அவர் தான் தற்போது அணிக்கு யாரும் எதிர்பாராத நேரத்தில் match வின்னராக மாறியுள்ளார்.