கனவிலும் நினைக்கவில்லை... அமீர் குறித்து பாவனி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
அமீர் குறித்து பாவனி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதனால் ரசிகர்கள் அமீருக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிபி ஜோடி நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தனது காதலைக் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார். பின்பு சில புகைப்படங்கள், பதிவுகளைக் கொண்டு தனது காதலை மறைமுகமாக கூறினார்.
சமீபத்தில் பிபி ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் அட்டகாசமாக நடனமாடிய நிலையில், திருமணமும் நடைபெற்றது. திருமணம் நடன நிகழ்ச்சிக்காக நடைபெற்றிருந்தாலும், ரசிகர்கள் பெரும் குஷியில் காணப்பட்டனர்.
அமீர்- பாவனி
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே அமீர் கால் பிரச்சனையாகவே இருந்த நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2க்காக ரொம்பவே சிரமப்பட்டு தொடர்ந்து கஷ்டமான ஸ்டெப்புகளை கொரியோகிராஃப் செய்து நடனமாடி வந்தார்.
இந்நிலையில் அந்த நடன ஃபோட்டோக்களை பதிவிட்டு பாவனி தற்போது ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், “அமீர் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.. ஒரு நல்ல நடன பயிற்சியாளரை பெற்றிருக்கிறேன்.
அமீருக்கு காயம்
கனவிலும் இப்படி நடனம் ஆடுவேன் என்று நினைக்கவில்லை.. உங்களுடைய பயிற்சியால் நான் எந்த பயமும் இல்லாமல் தற்போது நடனம் ஆடிக் கொண்டிருக்கிறேன்.. உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படி என்னை வார்த்தெடுக்க முடியாது. உங்களிடம் இருந்து இன்னும் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
முட்டியில் காயம் ஏற்பட்டு, சேனல் உங்களை விடுப்பெடுத்துக் கொள்ளவோ அல்லது வீல் சேரில் அமர்ந்தபடி பெர்ஃபார்ம் பண்ண சொல்லியோ சொன்னபோது, அந்த வாய்ப்புகளை ஏற்காமல், உங்களின் மீது நம்பிக்கை வைத்ததற்காக நீங்கள் எதற்கும் விட்டுக் கொடுக்கவில்லை.
கனவிலும் நினைக்கவில்லை..
குறிப்பாக எனக்கு திரும்பிச் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். நம்மை நம்பி ஒரு வேலை கொடுத்திருக்கிறார்கள் என்றால் என்ன நடந்தாலும் அதை பாதியில் விட்டு விட்டு செல்லக்கூடாது. மிகப்பெரிய மரியாதை உங்கள் மீது, உங்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மீது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரசிகர்களுக்கு பாவனி, “உங்களை என்டர்டைன் செய்வதற்கே நினைக்கிறோம். இது எங்களுடைய சிறந்த நடனம் இல்லை என்று சொன்னாலும் கூட இதை மறக்க முடியாததாக மாற்றி இருக்கிறீர்கள்.
உங்களுடைய தொடர்ச்சியான அன்புக்கு நன்றி. மேலும் பல விஷயங்களை பண்ணுவதற்கு எங்களை ஊக்குவிக்கிறது நீங்கள் பொழியும் அன்பு..” என்று தெரிவித்திருக்கிறார்