ஓடும் ரயிலில் ஏறிய பயணி - தவறி விழுந்த நொடிப்பொழுதில் போலீசார் செய்த சம்பவம்!

Tamil nadu Viral Video Ramanathapuram Railways
By Swetha Sep 24, 2024 11:30 AM GMT
Report

ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே பயணி சிக்கிக்கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயணி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட விரைவு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் உச்சிப்புளி பகுதியை சேர்ந்த பயணி ஒருவர் ஏறி வந்துள்ளார்.

ஓடும் ரயிலில் ஏறிய பயணி - தவறி விழுந்த நொடிப்பொழுதில் போலீசார் செய்த சம்பவம்! | Passenger Who Fell From Moving Train Police Saves

அவர் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு வந்ததும் அங்கிருந்து இறங்கி நின்றதாக கூறப்படுகிறது. பின்னர் ரயில் புறப்படவும் ஓடியப்படியே ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக,

தனி தனியாக கழன்று ஓடிய ரயில் பெட்டிகள் - ஓடும் ரயிலில் நடந்த பயங்கரம்!

தனி தனியாக கழன்று ஓடிய ரயில் பெட்டிகள் - ஓடும் ரயிலில் நடந்த பயங்கரம்!

போலீசார் 

அந்த பயணி கால் தடுமாறி ரெயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிக்கொண்டார். அதை பார்த்த ரயில்வே போலீஸ்காரர் உடனே ரயிலை நிறுத்தி சிக்கிக் கொண்டவரை லாவகமாக மீட்டனர்.

ஓடும் ரயிலில் ஏறிய பயணி - தவறி விழுந்த நொடிப்பொழுதில் போலீசார் செய்த சம்பவம்! | Passenger Who Fell From Moving Train Police Saves

உடலில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பயணி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பயணியை போலீசார் மீட்கும் காட்சிகள் சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.