டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளிய பயணி - ஷாக் பின்னணி!

Kerala Death
By Sumathi Apr 03, 2024 06:00 AM GMT
Report

பயணி ஒருவர் டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்துள்ளார்.

முன்பதிவின்றி பயணம்

கேரளா, எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா நோக்கி விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், வினோத் என்ற டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டுள்ளார்.

டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளிய பயணி - ஷாக் பின்னணி! | Passenger Pushed Ticket Checker Died In Kerala

அப்போது, எஸ் 11 பெட்டியில் ரஜினிகாந்த் என்ற பயணி மதுபோதையில், உரிய முன்பதிவு இன்றி பயணித்தது தெரியவந்தது. மேலும், சிலர் அவருடன் முன்பதிவின்றி பயணித்துள்ளனர்.

ஓடும் ரயிலில் பெண்னுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - டிக்கெட் பரிசோதகர் கொடுமை

ஓடும் ரயிலில் பெண்னுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - டிக்கெட் பரிசோதகர் கொடுமை

டிக்கெட் பரிசோதகர் கொலை

உடனே இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரஜினிகாந்த், திடீரென திருச்சூர் அருகே உள்ள வேலப்பையா என்ற இடத்தில் டிக்கெட் பரிசோதகர் வினோத்தை ரயிலில் இருந்து கீழே தள்ளினார்.

டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளிய பயணி - ஷாக் பின்னணி! | Passenger Pushed Ticket Checker Died In Kerala

அதில் எதிர்திசையில் வந்த மற்றொரு ரயில் மோதியதில், டிக்கெட் பரிசோதகர் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ஓடிசாவை சேர்ந்த ரஜினிகாந்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.