பள்ளியில் பாலியல் துஷ்பிரயோகம் - பாரிஸ் ஹில்டன் பரபரப்பு குற்றச்சாட்டு
மருத்துவ பரிசோதனையின் போது தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாரிஸ் ஹில்டன் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஹில்டன்
அமெரிக்காவை சேர்ந்த 41 வயதான மாடல் மற்றும் நடிகை பாரிஸ் ஹில்டன். இவர் மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில்,
``1990-ம் ஆண்டு மனநலம் சற்று பாதிக்கப்பட்ட டீன் ஏஜில் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ப்ரோவோ கேன்யன் பள்ளியில் என்னுடைய பெற்றோர் என்னைச் சேர்த்தனர். அங்கே 3 அல்லது 4 மணிவாக்கில், என்னையும் சில பெண்களையும் ஓர் அறைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சோதனைகளைச் செய்வார்கள்.
பரபரப்பு ட்வீட்
இரண்டு வெவ்வேறு பணியாளர்கள் எங்களை வலுக்கட்டாயமாக மேசையின் மீது படுக்க வைத்து, அரைத் தூக்கத்தில் இருக்கும் எங்களுக்கு மருந்துகளை வழங்கி, கால்களை விரிக்கச் சொல்லி, உள்ளே விரல்களை விட்டு சர்விகல் எக்ஸாமினேஷன் (cervical examination) செய்வார்கள்.
I opened up in a @NYTimes video about something I’ve never discussed before. At Provo Canyon School, I was woken up in the middle of the night by male staff who ushered me into a private room and performed cervical exams on me in the middle of the night. https://t.co/mWxF8Pvmaw
— ParisHilton (@ParisHilton) October 11, 2022
அந்தச் சமயத்தில் டாக்டர் இருக்க மாட்டார். என்ன செய்கிறார்கள் என்பதுகூட தெரியாது. அது மிகவும் பயமாக இருக்கும் ஆனால் இப்போது, வயது வந்தவராக அந்த நினைவைத் திரும்பிப் பார்த்தால், அது ஒரு பாலியல் துஷ்பிரயோகம் என்று தெரிகிறது. என்னுடைய குழந்தைப் பருவம் என்னிடமிருந்து திருடப்பட்டது;
இன்னும் மற்ற அப்பாவி குழந்தைகளுக்கு இது போன்று நடக்கிறது என்பது என்னைக் கொல்கிறது. பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவ, என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அதோடு பெற்றோர்கள் உங்கள் குழந்தைகள் தைரியமாகப் பேசவும், எவ்வித அச்சமுமின்றி அத்துமீறல்களைத் தெரிவிக்கவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.