நடிகை சித்ரா பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா முதன்முறையாக போட்ட உருக்கமான பதிவு

movie chitra kavya
By Jon Mar 09, 2021 11:41 AM GMT
Report

விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்படும் முன்னணி சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்துக்கொண்டிருந்த நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவின் மரணத்துக்கு பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்தான் காவ்யா அறிவுமணி. இவர் ஏற்கெனவே பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முல்லை கேரக்டரில் நடித்து வரும் காவ்யா முதல்முறையாக அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா குறித்து உருக்கமான பதிவை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் பதிவில், 'முல்லை. நான் பதிவிடும் முதல் போட்டோ. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் உருவாக்கப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு கேரக்டர். தமிழ் கலாச்சாரம், பண்பாட்டில் பிறந்து வளர்ந்து தனக்கென தனி அம்சங்களையும், அதற்கு பொருத்தமான உடல் மொழியையும் கொண்ட ஒரு தமிழ் பெண் கேரக்டர்.

அழகான பெண்களில் ஒருவரான விஜே சித்ராவை இந்த கதாபாத்திரத்தில் தேர்வு செய்ய குழுவினர் தீர்மானித்தனர். தனிப்பட்ட முறையில் நான் அவரை சந்தித்ததே கிடையாது. அவருடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் தூரத்தில் அவரை பார்த்தேன். அப்போது நான் இந்த தொலைக்காட்சிக்கு புதிது என்பதால் அது அவர்தானா என்று எனக்குத் தெரியவில்லை.

  நடிகை சித்ரா பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா முதன்முறையாக போட்ட உருக்கமான பதிவு | Pandian Stores First Post About Actress Kavya

அவரோடு நேரம் செலவழிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக செதுக்கி பலருக்கும் உந்து சக்தியாக இருந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய கதைகள் எனக்கு ஊக்கமாக இருந்தது. முல்லை கதாபாத்திரத்துக்கு 100% நியாயமாக இருந்திருக்கிறார்.

ஆனால் அனைத்து மனிதர்களின் வாழ்க்கையும் ஒரே மாதிரி முடிகிறது. அவர் எப்படி வாழ்ந்தார். எப்படி இறந்தார் என்பதே ஒருவரிலிருந்து ஒருவருக்கு மாறுபடுகிறது. அவர் முல்லையாக வாழ்ந்தார். சித்ரா தன்னை விட்டுச் செல்வார் என்று முல்லை எதிர்பார்த்திருக்கவே மாட்டார். அவர் நம் பார்வையிலிருந்து மறைந்திருந்தாலும் நம் மனதிலிருந்து மறையவில்லை.

இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஒரு நடிகையாக இது எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது ரசிகர்களையும், முல்லை ரசிகர்களையும் ஏமாற்றமாட்டேன். என் உயிர், கனவு, உலகம், தொழில் என அனைத்துமே நடிப்பு தான். ஆரம்பம் முதலே என்னை ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி' இவ்வாறு நடிகை காவ்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமாக கூறியுள்ளார்.