தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு - இஸ்ரேலை அதிர வைத்த மோடியின் முடிவு!

Narendra Modi India Israel-Hamas War
By Sumathi Oct 13, 2023 04:58 AM GMT
Report

தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 222 வீரர்கள் உட்பட 1,300 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. இந்த போரில் உலக நாடுகள் கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன.

தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு - இஸ்ரேலை அதிர வைத்த மோடியின் முடிவு! | Palestine Is Our Stand Says India Shocks Israel

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது.

கொந்தளிப்பு; அமெரிக்கா செஞ்ச இந்த தப்புதான் போருக்கே காரணம் - இஸ்ரேலுக்கு எதிராக குதித்த ரஷ்யா!

கொந்தளிப்பு; அமெரிக்கா செஞ்ச இந்த தப்புதான் போருக்கே காரணம் - இஸ்ரேலுக்கு எதிராக குதித்த ரஷ்யா!

இந்திய நிலைப்பாடு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பாதுகாப்பு, அமைதி ஏற்பட வேண்டும். இரண்டு நாடுகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக எங்களின் கொள்கை நீண்டகாலமாக மாறாமல் நிலையாக உள்ளது.

தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு - இஸ்ரேலை அதிர வைத்த மோடியின் முடிவு! | Palestine Is Our Stand Says India Shocks Israel

பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பாலஸ்தீனம் என்ற தனி நாடு இயங்க வேண்டும். பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.

பாலஸ்தீனம், இஸ்ரேல் இரண்டு நாடுகளும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், சுதந்திரமாக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ரஷ்யா, சீனாவும் பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.