காதலனுக்காக இந்துவாக மாறிய பெண் - கணவரை கதற விட்டுவிட்டு 4 குழந்தைகளுடன் ஓட்டம்!

Pakistan Uttar Pradesh
By Sumathi Jul 11, 2023 05:32 AM GMT
Report

பாகிஸ்தான் பெண் காதலனுக்காக இந்துவாக மாறியுள்ளார்.

பப்ஜியில் காதல்

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் உபி காதலனுடன் நொய்டாவில் கடந்த ஒன்றரை மாதமாக வசித்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்தப்பெண் சீமா, அவரது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சின் என்பவர் உட்பட ஆறு பேரைக் கைது செய்து விசாரித்தனர்.

காதலனுக்காக இந்துவாக மாறிய பெண் - கணவரை கதற விட்டுவிட்டு 4 குழந்தைகளுடன் ஓட்டம்! | Pakistani Woman Converted Hinduism 4 Children Love

அதில், ‘உத்தரப் பிரேதச மாநிலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் சச்சின். இவர் ஆன்லைனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போது பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சீமாவுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்துவாக மாற்றம்

இவருடைய கணவர் குலாம் ஹைதர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். அது காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து காதலனைப் பார்ப்பதற்கு தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளார். சச்சின் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியுள்ளார்.

காதலனுக்காக இந்துவாக மாறிய பெண் - கணவரை கதற விட்டுவிட்டு 4 குழந்தைகளுடன் ஓட்டம்! | Pakistani Woman Converted Hinduism 4 Children Love

இந்நிலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் இவர்களின் காதலை சச்சினின் பெற்றோர் ஏற்றுள்ளனர். முஸ்லிம் பெண்ணான சீமா தனது காதலன் சச்சினுக்காக இந்து மதத்துக்கு மாறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனது நான்கு குழந்தைகளின் பெயர்களையும் ராஜ், பிரியங்கா, பாரி மற்றும் முன்னி என்று இந்து பெயர்களாக மாற்றிவிட்டார். கங்கையில் புனித நீராடிய பிறகு இந்து முறைப்படி சச்சின், சீமா ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்படும் என்று சச்சின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.