பப்ஜியில் பழக்கம்; கணவனை விட்டுவிட்டு இளைஞருடன் சென்ற பாகிஸ்தான் பெண் - 5 குழந்தைகள் நிலை?
இளைஞருக்காக பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக பெண் ஒருவர் இந்தியா வந்துள்ளார்.
பப்ஜியில் காதல்
டெல்லி, கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் சச்சின். இவர் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜியை விளையாடி வந்துள்ளார். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் என்ற பெண்ணும் விளையாடியுள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து ஒன்றாக வாழவும் முடிவு செய்துள்ளனர். அதற்காக, அந்தப் பெண் தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, டெல்லியை அடைந்துள்ளார்.
சிக்கிய தம்பதி
அதனையடுத்து இருவரும் ரபுபுரா பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். அப்போது, பாகிஸ்தானியப் பெண் ஒருவர் வசிப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் இதனை முன்னரே அறிந்த சச்சின் அவர்களோடு அங்கிருந்து வெளியேறிவிட்டார். தொடர்ந்து அதனைக் கண்டுபிடித்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.