ஆன்லைனில் கல்யாணம்; இந்தியரை கரம்பிடித்த பாகிஸ்தான் பெண் - காரணம் பாருங்க!
இந்தியரை, பாகிஸ்தான் பெண் ஆன்லைன் வழியாக திருமணம் செய்துள்ளார்.
எல்லை கடந்த காதல்
பாகிஸ்தான், கராச்சியைச் சேர்ந்தவர் அமீனா. இவருக்கு இந்தியா, ஜோத்பூரைச் சேர்ந்த அர்பஸ் கான் என்பவருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
தொடர்ந்து, இருவரும் தங்கள் பெற்றோர், உறவினர்களுடன் பேசி சம்மதம் வாங்கியுள்ளனர். இந்நிலையில், அமினாவுக்கு இந்திய விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் உறவினர்கள் முன்னிலையில் ஆன்லைன் மூலம் திருமணம் செய்துள்ளனர்.
ஆன்லைன் திருமணம்
மேலும், இதுகுறித்து பகிர்ந்த அப்ரஸ் கான், ``நாங்கள் எங்கள் நாடுகளில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் திருமணம் செய்துகொண்டோம். மீண்டும் அமீனா விசாவிற்கு விண்ணப்பிப்பார். நான் பாகிஸ்தான் சென்று திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை.
அமீனா இந்தியாவை வந்தவுடன் நாங்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்வோம். இங்கு 'நிக்காஹ்' நடத்தப்பட்டது மட்டுமின்றி, குடும்பத்தினர் அனைத்து சடங்குகளிலும், கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர். விரைவில் எங்கள் திருமணம் சட்டப்படி இந்தியாவில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.