காதல் விவகாரம்; பாக்.பெண்ணிடமிருந்து 5 பாஸ்போர்ட்டுகள், செல்போன்கள் பறிமுதல் - உளவாளியா?
பாக். பெண்ணிடமிருந்து 5 பாஸ்போர்ட்டுகள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பப்ஜியில் காதல்
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் உபி காதலனுடன் நொய்டாவில் கடந்த ஒன்றரை மாதமாக வசித்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்தப்பெண் சீமா, அவரது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சின் என்பவர் உட்பட ஆறு பேரைக் கைது செய்து விசாரித்தனர்.
அதில், ‘உத்தரப் பிரேதச மாநிலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் சச்சின். இவர் ஆன்லைனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போது பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சீமாவுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.
உளவாளியா?
இவருடைய கணவர் குலாம் ஹைதர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். அது காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து காதலனைப் பார்ப்பதற்கு தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளார்.
சச்சின் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியுள்ளார். இந்நிலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் இவர்களின் காதலை சச்சினின் பெற்றோர் ஏற்றுள்ளனர். முஸ்லிம் பெண்ணான சீமா தனது காதலன் சச்சினுக்காக இந்து மதத்துக்கு மாறியுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து மாநில காவல்துறை, சீமாவிடம் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில், அவரிடம், பாகிஸ்தான் அரசு அங்கீகரித்துள்ள ஐந்து பாஸ்போர்ட்களும், ஒரு பயன்படுத்தப்படாத பாஸ்போர்ட்டும் இருந்தன. ஒரு முக்கிய அடையாள அட்டை உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறபப்டுகிறது.