வெடித்துச் சிதறிய பேருந்து; குழந்தைகள் உட்பட 21 பேர் உடல் கருகி பலி - பெரும் சோகம்!
பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி நேற்று அதிகாலை, 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே எரிபொருள் ஏற்றி வந்த வேனின் மீது எதிர்பாராத விதமாக பேருந்து பயங்கரமாக மோதியது.
அதில் பேருந்தும், வேனும் தீப்பற்றி எரிந்தது. ஒரு சிலரே பேருந்தில் இருந்து இறங்க முடிந்தது. மீதம் உள்ளவர்கள் அனைவரும் இறங்க முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனர்.
21 பேர் பலி
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் பேருந்து மற்றும் வேன் ஓட்டுநர்கள் உள்பட 21 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 16 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து நேர்ந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், அதிகாலை என்பதால் பேருந்து ஓட்டுநர் உறங்கி விட்டாரா?அல்லது அதிவேகத்தில் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.