எந்த அணியும் செய்யாத படுமோசமான சாதனை - பாகிஸ்தான் செய்த செயல்!
கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த அணியும் செய்யாத மோசமான சாதனையை பாகிஸ்தான் செய்துள்ளது.
PAK vs BAN
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இதே மைதானத்தில் நடந்த முந்தைய டெஸ்ட் போட்டியிலும் இதே போல தோல்வி அடைந்தது.
முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் எடுத்தவுடன் பாகிஸ்தான் அணி டிக்ளர் செய்தது. இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
மோசமான சாதனை
30 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் வங்கதேச அணி விக்கெட் இழக்காமல், 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி தங்களின் சொந்த மண்ணில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது.
அதில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேச அணி முதல்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
மேலும், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்டில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையையும் வங்கதேச அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.