2 ஆண்டுகள்.. விராட் கோலிக்காக அல்லாவிடம் துவா செய்த பாக். வீரர் - ஏன் தெரியுமா?
விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் அலி பேசியுள்ளார்.
விராட் கோலி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை எதிர்பார்த்து இருதரப்பு ரசிகர்களும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்திய வீரர் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் அலி பேசியுள்ளார். அவர் கூறியதாவது "விராட் கோலி ஒரு மாஸ் வீரர். அவர் சில நாட்களுக்கு முன்பு ஃபார்ம் இல்லாமல் தவித்தார்.
புகழாரம்
அப்போது அவருக்காக அல்லாவிடம் பிரார்த்தனை செய்தேன். விராட் கோலி சிறப்பாக விளையாட வேண்டும் என்று 2 ஆண்டுகளாக அல்லாவிடம் துவா செய்தேன். ஏன் இதை செய்தேன் என்று எனக்கு தெரியாது.
சரியாக விளையாடவில்லை என பலரும் அவரை விமர்சிக்கலாம். ஆனால், இந்த பணியை 15 ஆண்டுகளாக அவர் செய்து கொண்டிருக்கிறார் மறக்காதீர்கள். சரிவிலிருந்து தற்போது விராட் கோலி மீண்டு வந்துள்ளார். அப்படி இதுவரை மீண்டு வந்ததை நான் பார்த்ததில்லை" என்று தெரிவித்துள்ளார்.
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)
வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா? Manithan
![Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்](https://cdn.ibcstack.com/article/85ed7366-bf20-479a-8574-57dce86d32e1/24-667fada53d8dd-sm.webp)
Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ் Manithan
![Photo Album: இளசுகளை கட்டிப்போடும் அழகில் பிரியங்கா மோகன்.. புது hairstyle-ல் எப்படி இருக்காரு பாருங்க](https://cdn.ibcstack.com/article/67b49a27-45e0-4dbd-99bb-d89eea4344b4/24-667fe75fd2746-sm.webp)