இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ஒரு பேய் - AIMIM தலைவர் ஓவைசி காட்டம்!

Benjamin Netanyahu Israel Palestine
By Vinothini Oct 16, 2023 06:10 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஓவைசி இஸ்ரேல் பிரதமர் குறித்து கட்டமாக பேசியுள்ளார்.

போர்

இஸ்ரேல் நாட்டில் கடந்த வாரம் ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியது, இதில் 1300 பேர் உயிரிழந்தனர். பின்னர் இதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. காசா பகுதியை நோக்கி சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கே போர் தொடர்ந்து வருகிறது.

owaisi-said-israel-pm-as-ghost

மேலும், இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் எனத் தெரிகிறது. காசா எல்லையில் ராணுவ தளங்களை அமைந்துள்ள இஸ்ரேல் படை, அங்கே பீரங்கிகளையும் குவித்து வருகிறது. இதனால் காசா பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பெண்களை பார்த்தாலே பயம்.. 55 வருடம் வீட்டில் அடைந்து கிடந்த நபர் - இப்படியொரு வினோத பாதிப்பா?

பெண்களை பார்த்தாலே பயம்.. 55 வருடம் வீட்டில் அடைந்து கிடந்த நபர் - இப்படியொரு வினோத பாதிப்பா?

ஓவைசி

இந்நிலையில், இஸ்ரேல் குறித்து AIMIM தலைவர் ஓவைசி பேசியுள்ளார். அதில், "பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடியிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். பாலஸ்தீன பிரச்சனை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரச்சனை.

owaisi-said-israel-pm-as-ghost

எனவே, காசா மக்களுக்கு ஆதரவாக ஒற்றுமை காட்டுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். நெதன்யாகு ஒரு பேய், கொடுங்கோலன், போர்க் குற்றவாளி. காசாவில் 10 லட்சம் பேர் வீட்டை இழந்துள்ளனர்.

உலகமே இதைப் பார்த்து மவுனம் காக்கிறது. காசாவின் இந்த ஏழைகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமான தகவல் வெளியிடுகின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.