துரோகம் செய்தவர் இனி கட்சிக்கு தேவையா ? : கொந்தளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தை புறக்கணித்து அதிமுக அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
ஒபிஎஸ் நீக்கம்
ஓ. பன்னீர்செல்வம் வருகையை அறிந்த ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டது. இதில் மாற்றி மாற்றி ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். அத்துடன் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது .
துரோகம் இழைத்தவர் ஒபிஎஸ்
அத்துடன் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக கட்சி அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனால் அங்கு அசாதாரணமான சூழல் ஏற்பட்ட நிலையில் அதிமுக கட்சி அலுவலகமான ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி இந்த இயக்கத்தை அழித்துவிடவேண்டும் என்று ஓபிஎஸ் செயல்படுகிறார்; இவ்வளவு துரோகம் செய்தவர் இனி கட்சிக்கு தேவையா என சிந்திக்க வேண்டும் என கொந்தளித்து பேசினார்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு!