ஓபிஎஸ் என்ற விஷ நாகப்பாம்பு - அதிமுகவின் தோல்விக்கு காரணம்...!! கே.சி.கருப்பண்ணன்..!
எடப்பாடி தரப்பினர் தொடர்ந்து ஓபிஎஸ் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
ஓபிஎஸ் விஷப்பாம்பு
அதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பண்ணனும் பொதுக்கூட்டம் ஒன்றில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பண்ணன் பேசும் போது, கடந்த சட்டமன்ற தேர்தலில் 1.5 லட்சம் ஓட்டுகளில் அதிமுக தோல்வியடைந்தற்கு காரணம் ஓபிஎஸ் என்ற விஷ நாகப் பாம்புதான் காரணம் என சாடினார்.
ஒழித்தே ஆகவேண்டும்
அந்த பாம்பை ஒழிக்க வேண்டும் என்றும் அதற்காகத்தான் அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது என்று கூறிய அவர், ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளை அனுசரித்து ஒற்றுமையாக இருந்தால் எப்படி குடும்பம் நன்றாக இருக்குமோ அந்த வகையில் தான் மத்திய அரசை இபிஎஸ் ஆதரித்தார் என திமுகவின் விமர்சனத்திற்கும் பதிலளித்தார்.
எடப்பாடி பழனிசாமி அவ்வாறு மத்திய அரசி ஆதரித்ததன் காரணமாக தான் தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான நிதியுதவிகளை இபிஎஸ் பெற்றுத் தந்தார் என்று சுட்டிக்காட்டிய கே.சி.கருப்பண்ணன்,
திமுக மத்திய அரசின் எதிர்ப்பால் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்று தெரிவித்தார்.