நாடாளுமன்ற தேர்தல் - மண்டல வாரியாக சென்று...பணிகளை துவங்கிய அதிமுக..!
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தனது பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
ஓபிஎஸ் வெளியேற்றம், ஒற்றை தலைமையாக இபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக என இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, அதிமுக பல அரசியல் நகர்வுகளை சந்தித்துள்ளது.
இந்த தேர்தல் கடும் நெருக்கடிகளை அதிமுக சந்திக்கும் என அரசியல் வல்லுநர்கள் கூறும் நிலையிலும், பூத் அளவில் ஆராய்ந்தால் அதிமுக தனது பலத்தை தக்கவைத்துள்ளதே வெளிப்படுகிறது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில், அதற்கான பணிகளில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது.
இன்று அதிமுக வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், கட்சி சார்பில் கழக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு குறித்து தகவல் இடம்பெற்றுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2024
— AIADMK (@AIADMKOfficial) January 26, 2024
கழக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவினர் மண்டலம் வாரியாகச் சென்று
பொதுமக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெறுதல் !
5.2.2024 முதல் 10.2.2024 வரை.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித்… pic.twitter.com/dz8p0Kvr2R
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2024 கழக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவினர் மண்டலம் வாரியாகச் சென்று பொதுமக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெறுதல் !
5.2.2024 முதல் 10.2.2024 வரை என குறிப்பிடப்பட்டுள்ளது.