ஓபிஎஸ் -200 ஈபிஎஸ் -200 பாயும் வழக்குகள் , நெருக்கடியில் அதிமுக தொண்டர்கள்
ஓபிஎஸ் ஈபிஎஸ் இருதரப்பிலும் தலா 200 பேர் என மொத்தம் 400 பேர் மீது ஏழு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் சம்பவத்தை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கலவரமான அதிமுக அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ளது. நேற்று சென்னை வானகிரகத்தில் இபிஎஸ் அணியினர் சார்பில் அதிமுக பொதுக்குழு கூடிய நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.
ஆனால் அவர்களை உள்ளே விடக்கூடாது என்று முன்கூட்டியே இபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கே குவிந்திருந்தனர். மேலும் அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு போட்டிருந்தனர்.
400 வழக்குக்கள்
இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் எடப்பாடி ஆதரவாளர்களை அடித்து துரத்தி விட்டு அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
இதனால் அந்த பகுதி முழுவதுமே ஒரே கலவர பூமியாக மாறியது. பலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. ஓபிஎஸ் ஆதரவாளருக்கு கை முறிந்தது. இதை அடுத்து அந்தப் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சட்டம் ஒழுங்கு மோசம் அடைவதை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது . அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல தடை போடப்பட்டன.
ராமனாக அண்ணன் எடப்பாடி , லட்சுமணனாக ஒன்றரை கோடி தொண்டர்கள் : ஆர்.பி.உதயகுமார் புகழாரம்